தமிழில் நாட்டில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் பிறந்து வளர்ந்து தேசபக்தியை தன் செங்குருதியில் ஊட்டி,, தானாக தனக்கென ஒரு தனிக் கொள்கையை வகுத்துக் கொண்டு வளர்ந்து வந்த நிலையில் தனது கல்வியை முடித்த உடனே இந்திய இராவத்தில் சேர வாய்ப்பு கிடைத்ததால் ஒரு போர் வீரனாக தன்னையும் இணைத்துக் கொண்டார், கடுமையான பயிற்சியும் கடின உழைப்பால் பல்வேறு துறைகளிலும் DRDO போன்ற துறைகளிலும் சேவையாற்றியுள்ளார். தேசத்தின் மீது மாறா பற்றினால் தனது இராணுவ பணிகளை செவ்வனே செய்து பணிக்காலத்தை முடித்து ஓய்வுபெற்றார். நாட்டின் பாதுகாப்பு பணியில் இந்திய எல்லைகளில் பணியாற்றி ஓய்வு பெற்றாலும் அவரது தேசிய உணர்வு மாறாமல் நாட்டுக்காக உழைத்து பணி ஓய்வு பெற்ற முன்னாள் படைவீரர்களை ஒருங்கிணைத்து முன்னாள் படைவீரர்கள் சங்கத்தை 2017 ஆம் ஆண்டு முதல் முதலில் காஞ்சிபுரத்தில் துவக்கினார். ஒழ்வு பெற்றபின் தனியார் நிறுவங்களில் சிறு குறு தொழில் செய்து தன் திறமையை வெளியில் காட்ட முடியாமல் போராடிகொண்டிருக்கும் முன்னாள் இராணுவ வீரர்களுக்கும் காவல் துறையில் அதிக இட ஒதுக்கீடு பெற்றுத்தரவும், அரசு அலுவலகங்களில் முன்னாள் இராணுவ வீரர்களை எவ்வாறு பயன் படுத்தலாம், இதனால் அரசுக்கு என்ன பயன் என்பது குறித்து தமிழக அரசுக்கு தெரிவிக்க வேண்டும்மென்றால் சங்கம் போதாது நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக, ஊழல், லஞ்சம் என நாளுக்கு நாள் மாறிவரும் அரசியல் சூழ்நிலை இவரது மனதை துப்பாக்கி தோட்டா வாக நுழைத்து விட்டது அதனால் மிகவும் மனம் வேதனையில் – சிந்தித்த போது தான் எல்லையை காத்த இராணுவ வீரர்கள், நாட்டின் பாதுகாப்புக்கு உழைத்த முன்னாள் படைவீரர்கள் உள்ள நாட்டுக்குள் மக்களுக்காக உழைக்க ஏன் நாமும் ஒரு அமைப்பை ஏற்படுத்தக் கூடாது என்ற எண்ணம் தோன்றியது. அன்றைய தினம் சிறிதும் தாமதிக்காமல் தமிழ் நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்து முன்னாள் முப்படை படைவீரர்களை நேரில் சந்தித்து தன்னுடைய நோக்கத்தை எடுத்துக் கூறினார். அவரது எண்ணத்தையும் நோக்கத்தையும் நன்கு புரிந்து கொண்ட அணைவரும் ஏகமனதாக ஆதரவு தெரிவித்தனர். ]அதனைத் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களைச் சார்ந்த முன்னாள் படைவீரர்களையும் ஒருங்கிணைத்து மாநில அளவில் இந்திய முன்னாள் முப்படை மற்றும் துணை இராணுவப் படையினர் நல கூட்டமைப்பு என்ற பெயரில் ஒரு அமைப்பு 2019 ஆம் ஆண்டு உருவெடுத்தது. அந்த அமைப்பின் மூலமாக முன்னாள் படைவீரர்களுக்கு மத்திய மாநில அரசுகளால் வழங்கப்படும் சலுகைகளையும், பணியின் போது நாட்டுக்காக உயிர் தியாகம் செய்து இராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு தேவையான அரசு உதவிகளை போராடி பெற்றுத் தந்துள்ளார். நாட்டிற்காக இந்திய எல்லையில் நம் தேசத்தையும், மக்களையும் தன்னலமற்ற அர்ப்பணிப்பு உணர்வுகளோடு பாதுகாக்க தன் உற்றார் உறவினர்களை பிரிந்து அடர்ந்த பனி மூட்டம் மற்றும் காடுகளில் பாதுகாத்து வரும் இந்திய இராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கும், அவர்களது சொத்துக்கள் மற்றும் உடமைகளுக்கும் பாதுகாப்பு உண்டா என்றால் அது கேள்வி குறியாக்கி விட்டது அங்கே தான் அதிர்ச்சி தரும் சம்பவங்கள் நடந்து உள்ளது. முன்னாள் இராணுவ வீரர்களுக்கு மட்டும் குரல் கொடுப்பதை விட சாதி மதங்களைக் கடந்து சமூகத்தில் அனைத்து தரப்பினருக்குமான உரிமைகளுக்கும் குரல் கொடுக்க முடிவெடுத்தார். அன்றைய தினம் அவருக்கு கிடைத்த மற்றொரு மாபெரும் சமூக சேவகர் தான் டத்தோ M டேவிட் அவர்கள், அதன் விளைவாக விவசாய்கள், பொது மக்கள், தொழிலாளிகள் உள்ளிட்ட முன்னாள் படைவீரர்களையும் ஒருங்கிணைக்க முடிவெடுத்தார், அவரது கூற்றை கூட்டமைப்பின் மாநில உயர்மட்டக் குழுவும் மற்றும் ஏனைய உறுப்பினர்களும் ஏகமனதாக ஆதரவு தெரிவித்து நடைமுறை படுத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பணிக்காலாம் முடிந்தும் மக்கள் நலனுக்காக குரல் கொடுக்க ஒரு புதிய சகாப்தத்தை படைத்து உள்ளார் Lion.Dr.சுரேஷ்பாபு. அவர்களது அளப்பரிய பணியை பலதரப்பட்டவர்களும் வெகுவாக வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். நேற்று... சுவாமி விவேகானந்தர் கேட்டார் துடிப்பு மிக்க வீரமும், விவேகமும் கொண்ட நூறு இளைஞர்களை கொடுங்கள் என.. ஆனால்..! இன்று... வீரமும் விவேகமும் ஒருங்கிணைந்த ஆயிரம் ஆயிரம் இளைஞர்களை அணிதிரட்டி தேசத்தின் முன்னாள் படைவீரர்கள் அரசியல் களத்தில் அணிவகுத்துச் செல்லும் புதிய சகாப்தம் துவங்கி விட்டது. நமது தேசத்தின் விடுதலைக்காக போராடிய இன்னுயிரை தியாகம் செய்த தேசத் தலைவர்களின் கனவுகளை நினைவாக்கப் புறப்பட்ட தேசப் பற்றை செங்குருதி எங்கும் நிரம்பப் பெற்ற பாரதிய முன்னாள் படைவீரர்களின் கூட்டமைப்பின் வலிமை, திசை எங்கும் புகழுரைக்கும் மக்கள் திரல நாட்டட்டும் வெற்றிக் கொடியை, பரவட்டும் திக்கெட்டும் வெற்றி முழக்கம் ...! மக்களை காக்க வந்த எங்கள் நிருவனத் தலைவர் Lion.Dr.சுரேஷ்பாபு அவர்கள் லட்சியப் பயணம் நிறைவேற என்றும் துணை இருப்போம். இவன்.... இந்திய முன்னாள் முப்படை மற்றும் துணை இராணுவப் படையினர் நல கூட்டமைப்பு தமிழ் நாடு. நாமும் வாழ்த்துவோம்..! நன்றி ஜெய்ஹிந்த்...!!